search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீமுஷ்ணம் விபத்து"

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அகரசோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). லாரிடிரைவர். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சோழதரம் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜா தூக்கிவீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சோழதரம் போலீசார் விரைந்து  சென்று விபத்தில் இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ராஜாவுக்கு அம்சவேணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். #tamilnews

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலியானார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகயா (வயது 66). இவர் ஸ்ரீமுஷ்ணம்- ஆதிவராக நல்லூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கனகயா மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் கனகயா நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×